செட்டிநாட்டுப் பாரம்பரிய வீடுகள் மிக அழகாக, ஆனால் பிரம்மாண்டமாக இருக்கின்றன. அந்த வீடுகளைப் பராமரிக்க அதிகச் செலவு ஆவதால், அதன் உரிமையாளர்களால் செலவு செய்ய முடியவில்லை. அதனால், வீடுகளை இடித்து, அதன் பழைய பொருட்களை விற்க வேண்டிய கட்டாயத்துக்கு உரிமையாளர்கள் தள்ளப்படுகிறார்கள்.